கடல் அலையில் சிக்கிய கம்பளி பூச்சி போல, வெள்ளத்தில் திணறும் மும்பை ரயில்கள்! #MumbaiRains
மும்பை கடும் மழை பெய்து வருவதால் மக்கள் எத்தகைய பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறித்து டிவிட்டரில் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
மும்பை: மும்பையில் கன மழையால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில்கள் கடல் அலையில் ஊர்ந்து செல்வது போல் காட்சியளிக்கிறது.
மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாகனங்கள் சாலையில் செல்ல முடியாததால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் மழையின் தாக்கமும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில உங்களுக்ககாக...
|
இதற்கு முன்னர் இப்படி இல்லை
மும்பை விமான நிலையத்தில் பலமான காற்று மற்றும் கனமழையால் வெளியே வர முடியாமல் 2 மணி நேரமாக விமானத்தில் உள்ள பயணிகள் என்று ஒரு வீடியோ காட்சி பதிவாகியுள்ளது.
|
கடல் அலையில் ஊர்ந்து செல்லும் ரயில்கள்
கனமழையால் மும்பை ரயில் நிலைய தண்டவாளங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள போதிலும் கடல் அலை போன்ற மழை நீரில் ஊர்ந்து செல்லும் ரயில்கள்.
|
இதுவல்லவா சான்ஸ்
காவி நிறத்திலான காரட் பொறியல் செய்ய முற்பட்ட போது அதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்து அதனுடன் பச்சை பீன்ஸை சேர்த்து இந்தியாவின் மதசார்பற்ற நிலையை நிலைநிறுத்தினேன். ஆட்சியாளர்களை கிண்டல் செய்ய இதுவல்லவோ சான்ஸ்.
|
நாங்களும் சிக்கிக் கொண்டோம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகர் வெள்ளக் காடாக மாறியுள்ளதை போல் மும்பையும் வெள்ளக் காடாக மாறியுள்ளது என்கிறார் இந்த வலைஞர்.
|
நீச்சல்தான் இன்றைய விளையாட்டு
உலக விளையாட்டு தின வாழ்த்துகள். இன்றைய விளையாட்டு தேர்வு நீச்சலாகதான் இருக்கும். மகிழுங்கள் என்று மும்பை வெள்ளம் குறித்து பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
|
வெள்ளத்தில் மிதந்து செல்லும் கார்
மும்பையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு காரில் சென்ற போது சாலையில் உள்ள வெள்ளநீர் முகப்பு கண்ணாடி அளவுக்கு வருவதை இந்த வீடியோவில் படம் பிடித்துள்ளார் படத்தயாரிப்பாளர் அசோக் பண்டிட்.












Click it and Unblock the Notifications