இத்தாலிக்கு ஓடிப்போங்க... சமூகவலைத்தளங்களில் காங்கிரசுக்கு எதிரான போர்
ஹைதராபாத்: நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி கொடுத்தது ஒருபுறம் இருக்க, இந்த தோல்வியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள்.
காங்கிரஸ் கட்சி தோல்வி தழுவியதால் சோனியாவும், ராகுல்காந்தியும் இந்தியாவை விட்டு இத்தாலிக்கு ஓடிப்போங்கள் என பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஆந்திராவாசிகள்.
இந்த பேனரை சமூகவலைத்தளங்களில் போட்டு வசைபாடுகின்றனர். அதுமட்டுமல்லாது, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, ராகுல் பற்றியும் பல்வேறு படங்களைப் போட்டு ஷேர் செய்கின்றனர்

பிரேத பரிசோதனை
நான்கு மாநில தேர்தல் முடிவுகளை சுயபரிசோதனை செய்வோம் என்றுதானே சொன்னீங்க? என்று கேட்டு இந்தப் படத்தை பகிர்ந்துள்ளனர்.

இத்தாலிக்கு போங்க
தோல்வியை தழுவிய சோனியாவும், ராகுலும் இத்தாலிக்கு போங்க என்று ஆந்திராவில் வைக்கப்பட்ட பேனர்தான் ஹாட் பகிர்வு.

மூட்டை கட்டுவோமா?
பிரியங்கா, வதேரா, ராகுல்காந்தி ஆகியோர் கவலை தோய்ந்த முகங்களுடன் அமர்ந்துள்ள படமும் அதற்கு போட்டுள்ள கமெண்ட்தான் இத்தாலிக்கு மூட்டை கட்டுவோமா என்பது.

மண் அள்ளிப் போட்டுட்டாங்க
தான் ஒரு ஏழைப்பங்காளன் என்பதை உணர்த்தும் வகையில் ராகுல்காந்தி பல ஸ்டண்ட் அடித்தார். மண் சுமந்தார். குடிசை வீட்டில் தங்கினார். இதை வைத்து கமெண்ட் அடித்துள்ள சமூகவலைதள வாசிகள், நாம மண் அள்ளிப் போட்டோம், கடைசியில நமக்கே மண் அள்ளிப் போட்டுட்டாங்களே என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications