பாஜகவை உலுக்கிய சிறுமி பலாத்கார சம்பவம்.. காஷ்மீரில் 2 அமைச்சர்கள் ராஜினாமா!
காஷ்மீரில் குற்றவாளிகளுக்கு ஆதரவுப் பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
Recommended Video

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு பதவி விலகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் காத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

கண்டனம் தெரிவித்த மோடி
இதுதொடர்பாக நேற்று டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் கதுவா மற்றும் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் சம்பவங்கள் தேசத்திற்கு அவமானத்தை தேடித்தந்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவரை முதல்வர் மெஹபூபா பதவி நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார். எனவே இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி பேசுகையில், "சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொறுப்பற்ற சிலரின் பேச்சு மற்றும் செயல்களால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தடை ஏற்படுத்த முடியாது. விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிடிபி மற்றும் பாஜக கூட்டணியில், அமைச்சர் பதவியில் இருந்த இரண்டு பாஜக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் இருவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டதால் அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, பதவி விலகல் கடிதத்தை நேற்று முதல்வரிடம் அளித்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதுதொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் சத் ஷர்மா பேசுகையில், இரண்டு அமைச்சர்களும் இந்து பேரணியில் கலந்துகொண்டது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும், ஆனால் அவர்கள் அப்படி கலந்துகொண்டிருக்கக்கூடாது என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் மெஹபூபா முஃப்தி ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications