டெல்லியில் சிறுமியை சீரழிக்க முயன்ற 2 கான்ஸ்டபிள்கள் டிஸ்மிஸ்
டெல்லி: வடமேற்கு டெல்லியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கான்ஸ்டபிள்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி விகாஸ்பூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 3 சிறுமிகள் தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கான்ஸ்டபிள் அமித் தோமார் 3 சிறுமிகளிடமும் நைசாகப் பேசி பணம் தருவதாகக் கூறி கிங்ஸ்வே காம்பில் உள்ள கான்ஸ்டபிள் குர்ஜிந்தர் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு 2 சிறுமிகளை ஒரு அறையில் பூட்டிவிட்டு மற்றொரு சிறுமியை தோமாரும், சிங்கும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அந்த சிறுமியும், பக்கத்து அறையில் இருந்த சிறுமிகளும் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் விரைந்து வந்து சிறுமிகளை மீட்டு அந்த 2 கான்ஸ்டபிள்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications