பாகிஸ்தானுக்கு உளவு.. காஷ்மீர் எல்லையில் 2 பேர் கைது!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்ததாக ஜம்மு எல்லையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையான ஆர்.எஸ் புராவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சமூக வலைதளத்தில் ரகசிய தகவல்களை வெளியிட்டு வந்த 2 பேரை கைது செய்திருப்பதாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
சத்விந்தர் சிங், தாது ஆகிய இருவர் சர்வதேச எல்லைப் பகுதியான சுசத்கார்க்கில் சுற்றித்திரிந்து பாதுகாப்பு நிறுவனங்களின் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, துரிதமாக அங்கு சென்ற அவர்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இருவரும் இராணுவ முகாம்கள், பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் ஆகியவற்றின் அமைவிடங்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது உளவு பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications