காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக அமைச்சர்கள்.. திடீர் பதவி விலகல்!
காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமி விவகாரத்தில் மோசமான கருத்துக்கள் கூறிய பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியை விலகி இருக்கிறார்கள்.
காஷ்மீர்: காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமி விவகாரத்தில் மோசமான கருத்துக்கள் கூறிய பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியை விலகி இருக்கிறார்கள்.
காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
அதேபோல் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில், ஜம்முவின் பாஜக மாநில அமைச்சர்கள், லால் சிங், சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்களே இப்படி ஊர்வலம் நடத்தலாமா என்று கேள்வி எழுந்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த அமைச்சர்கள் பதவி விலகி இருக்கிறார். இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications