பஞ்சாபில் குண்டு வெடித்து தந்தை, மகள் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
தரன்தரன்: பஞ்சாப் மாநிலம் தரன்தரன் பகுதியில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்ததில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் தரன்தரன் பகுதியில் உள்ள நார்லியைச் சேர்ந்தவர் முக்தயர் சிங் (32). இவரது மகள் சந்தீப் கவுர் (7). முக்தயர் சிங் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார்.

முக்தயர் சிங் தனது மகளுடன் நேற்று கடையில் இருந்தார். அப்போது இரும்பு பொருட்களுடன் கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்றை உடைத்தபோது எதிர்பாரதவிதமாக வெடுத்து சிதறியது. இதில் இரும்பு வியாபாரியும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ விரைந்து இருவரது உடல்களையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications