டெல்லியில் 2 மணிப்பூர் இளைஞர்கள் மீது தாக்குதல்
டெல்லி: டெல்லியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லி லாஜ்பாத் நகரில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் நிடோ டேனியம் பலியானார். இது தொடர்பாக வழக்கு விசாராணை நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை நெறிபடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேஸ்பருவா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் நிடோ டேனியத்தை தொடர்ந்து மணிப்பூர் மாநில சிறுமி ஒருவர் கடந்த வெள்ளியன்று பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.
தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த சம்பவங்களால் டெல்லி வாழ் வடகிழக்கு மாநில மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.