டெல்லியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்... பாதிப்பில்லை
Subscribe to Oneindia Tamil

முதல் நிலநடுக்கம் 12.41 மணியளவில் ஏற்பட்டது. இது சில விநாடிகளுக்கு நீடித்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டராக பதிவானது. அடுத்து 1.41 மணிக்கு 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நொய்டா, காஸியாபாத் உள்ளிட்ட பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். இது 3.3 ரிக்டராக இருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதியடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறி வந்தனர். பலர் இரவெல்லாம் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.












Click it and Unblock the Notifications