கண்டதுண்டமாய் வெட்டி மூட்டை கட்டி வீசப்பட்ட இரு பிணங்கள் – கைப்பற்றி போலீஸ் விசாரணை
ஹாஜிபூர்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட இரண்டு பிணங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலைகளுக்கும், கூலிப்படைகளுக்கும் பெயர் போன பீகார் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதல் சம்பவத்தில் ராம்ஜீவன் சவுக் பகுதியில் ஒரு மூட்டையில் துண்டுத்துண்டாக வெட்டப்பட்டிருந்த ஒரு ஆணின் தலையில்லா பிணமும், இரண்டாவது சம்பவத்தில் சடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிகி பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே இன்னொரு ஆணின் பிணமும் துண்டங்களாக கிடந்தன.
இறந்துக் கிடந்த நபர்கள் யார் போன்ற விவரங்களையும், அவர்கள் எதற்காக இவ்வளவு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொடூர கொலைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications