சோனியாவுக்கு உடம்பு சரியில்லை: போஸ்டர் ஒட்டிய உ.பி. காங்கிரஸார் 2 பேர் சஸ்பெண்ட்
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லை என்று பேனர் வைத்த உத்தர பிரதேச மாநில காங்கிரஸார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லை என்று பேனர்கள் வைக்கப்பட்ன. ஜஹவர்லால் நேரு போட்டியிட்ட பூல்புர் தொகுதியில் பிரியங்கா போட்டியிட வலியுறுத்தி தான் இந்த பேனர்களை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேனர்கள் வைத்தது தொடர்பாக அலகாபாத் மாவட்ட கமிட்டி செயலாளர் ஹசீப் அகமது மற்றும் எஸ்.சி. துபே ஆகியோர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஹசீப் அகமது கூறுகையில்,
சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லை. ராகுல் காந்திக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனால் பிரியங்கா ராகுலுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications