ம.பி.யில் பயங்கரம்: 2 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது உறவுக்காரர்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் இரண்டரை வயது பழங்குடியின பெண் குழந்தை தனது உறவினரால் பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் 6 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள லாம்பெலா கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை படித்து வருகிறது. அந்த குழந்தை பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதன் உறவினர் தனு புரியா(30) குழந்தையை பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து தனுவை தேடினர். இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.