Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் பயணியை கண்ணாடி வழியாக பார்த்து சுயஇன்பம் அனுபவித்த இன்னொரு உபேர் டிரைவர் கைது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் கார் கண்ணாடி வழியாக பெண் பயணியை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்த உபேர் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஷாகேன்(25) என்ற பெண் கடந்த 8ம் தேதி மாலை எல்கின் சாலையில் உள்ள மாலில் இருந்து நேதாஜி நகரில் இருக்கும் தனது வீட்டிற்கு உபேர் டாக்சியில் சென்றுள்ளார். டாக்சியை பின்ட்டு யாதவ் ஓட்டியுள்ளார். யாதவ் கார் கண்ணாடி வழியாக ஷாகேனை பார்த்துக் கொண்டே ஒரு கையால் சுயஇன்பம் அனுபவித்துள்ளார், மறுகையால் காரை ஓட்டியுள்ளார்.

Uber driver arrested for obscenity, dismissed in Kolkata

இதை பார்த்த ஷாகேன் அதிர்ச்சி அடைந்தார். உதவி கேட்டு சப்தம் போட்டால் யாதவ் தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் அவர் அமைதியாக இருந்தார். தனது வீடு வந்ததும் டாக்சியில் இருந்து வேகமாக இறங்கி ஓடிவிட்டார். அவர் தன்னுடன் பணிபுரியும் நபர் ஒருவருக்கு போன் செய்து டாக்சியில் நடந்ததை தெரிவித்தார். அந்த நபரின் அறிவுரையின்பேரில் ஷாகேன் யாதவ் மீது போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யாதவை தேடிப்பிடித்து திங்கட்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் நேற்று வெளியே வந்துவிட்டார்.

உபேர் நிர்வாகி கருண் ஆர்யா கூறுகையில்,

யாதவை உடனடியாக சஸ்பெண்ட் செய்தோம். தற்போது அவரை பணிநீக்கம் செய்துவிட்டோம். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

யாதவ் தவறான தகவல்களை அளித்து வேலைக்கு சேர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் டாக்சி ஃபார் ஷுயர் டிரைவர் இதே போன்று வாகனத்தை ஓட்டுகையில் சுயஇன்பம் அனுபவித்து சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+