இந்தியாவில் தனது முதல் டேட்டா சென்டரை அமைக்க.. அதானி குழுமத்துடன் கைகோர்க்கும் ஊபர்!
இந்தூர்: சர்வதேச ரைட்-ஹெய்லிங் நிறுவனமான ஊபர், இந்தியாவில் தனது முதல் டேட்டா சென்டரை அமைக்க அதானி குழுமத்துடன் முக்கிய பார்டனர்ஷிப்பை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் அமைப்புகள் மற்றும் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். இது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கண்டுபிடிப்பில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை உலகிற்குக் காட்டுவதாக உள்ளது..
ஊபர் தலைமைச் செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி மற்றும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி அகமதாபாத்தில் சந்தித்த பிறகு இந்த பார்டனர்ஷிப் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஊபரின் நீண்டகால ஈடுபாட்டையும், உலகளாவிய தொழில்நுட்ப மையமாக நாட்டின் நிலையை வலுப்படுத்துவதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அதானி
இந்த புதிய டேட்டா சென்டர், AI, கிளவுட், மேப்பிங் மற்றும் மொபிலிட்டி தளங்களைச் சோதித்து மேம்படுத்தும். இந்தியாவின் வலுவான பொறியியல், டிஜிட்டல் சூழல் மற்றும் இணைய உள்கட்டமைப்பு ஊபரின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு இந்தியாவை முக்கியமானதாக்கின என ஊபர் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டுக்கு வரும் இந்த மையம், பிராந்தியத்தில் ஊபரின் வணிகச் செயல்பாடுகளுக்குத் தொழில்நுட்ப முதுகெலும்பாக இருக்கும். டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டேட்டா லோக்கலைசேஷன் திறன்களில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளின் வளர்ச்சியையும் இது பிரதிபலிக்கிறது.
ஊபர்
கடந்த சில ஆண்டுகளாக ஊபரின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. இந்த டேட்டா சென்டர், ஊபரின் உள்ளூர்மயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்தி, சேவைத் திறன், டேட்டா செயலாக்கத் திறன்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்தும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதானி குழுமத்திற்கு இந்த பார்டனர்ஷிப், அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டேட்டா சென்டர் வணிகங்களின் போர்ட்ஃபோலியோவில் சர்வதேச மார்கெட்டில் முக்கிய இடத்தில் சேர்க்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் முன்னணிப் பங்கு வகிக்க வேண்டும் என்ற இலக்குடன், அதானி குழுமம் பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது.
ஊபர் அதானி பார்டனர்ஷிப்
ஊபர் அதானி பார்டனர்ஷிப், உலகளாவிய தொழில்நுட்ப முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியாவின் வளர்ச்சியை நிபுணர்கள் கருதுகின்றனர். நாட்டின் டிஜிட்டல்மயமாக்கல், கிளவுட் சேவைகளுக்கான தேவை மற்றும் ஆதரவான கொள்கைச் சூழல் ஆகியவை வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளூரில் மேம்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்க ஊக்குவிக்கின்றன.
இந்த முதலீடுகள் தொழில்நுட்பம், பொறியியல், உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். டேட்டா சேமிப்பு, AI கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும் என்ற லட்சியங்களை இந்த முதலீடுகள் வலுப்படுத்தும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தனது முதல் டேட்டா சென்டரை இந்தியாவில் தொடங்கிய ஊபர், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான தளமாக இந்தியாவைத் தேர்வு செய்யும் பிற சர்வதேச நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை இம்முயற்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications