உதம்பூரில் சிக்கிய பாக். தீவிரவாதிக்கு உதவியதாக 2 பேர் கைது, மேலும் 3 பேரிடம் விசாரணை
உதம்பூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி முகம்மது நவேத்துக்கு உதவி செய்ததாக 3 பேரை காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டம் சம்ரோலி அருகே அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு சென்று திரும்பிய பாதுகாப்புப் படையினர் மீது 2 தீவிரவாதிகள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இன்னொரு நபரான முகம்மது நவேத் பின்னர் உயிருடன் சிக்கினான்.

டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்றுள்ள தேசிய புலனாய்வு முகமை ஐ.ஜி. எஸ்.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் முகமது நவேத்தை தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி 2 மாதங்களுக்கு முன்பே முகமது நவேத்தும், அவனது கூட்டாளிகளும் பாரமுல்லா மாவட்டத்துக்குள் நுழைந்தது தெரிய வந்தது.
முதலில் தங்மார்க், பாபா ரேஷி ஆகிய இடங்களில், தான் தங்கி இருந்ததாகவும், பின்னர் புலவாமாவுக்கு தனது இருப்பிடத்தை மாற்றியதாகவும், அங்கு மலைப்பகுதியில் உள்ள குகையில் சில நாட்கள் தங்கியதாகவும் விசாரணையின் போது முகமது நவேத் தெரிவித்துள்ளான்.
நவேத்துக்க ஜாவேத் அகமது பாரி என்ற டிரைவரும், டிராஸ் பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது என்ற வெல்டரும் அடைக்கலம் கொடுத்து உதவிய தகவல் விசாரணையில் தெரிய வந்தது. அவந்திபுரா சுர்சூ என்ற இடத்தில் உள்ள ஜாவேத் அகமது பாரியின் வீட்டில்தான் முகமது நவேத் தங்கி இருந்திருக்கிறான். அவர்தான் முகமது நவீத்தை கடந்த 5 ம் தேதி தாக்குதல் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜாவேத் அகமது பாரியையும், பயாஸ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பயாஸ் அகமது லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications