பாஜகவில் வெடித்தது மோதல்! சாத்வி பிரக்யாசிங் மீது மத்திய அமைச்சர் உமாபாரதி கடும் பாய்ச்சல்!
போபால்: மத்திய பிரதேசத்தில் தம்மை ஓரம்கட்ட சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யசிங்கை பாஜக மேலிடம் களமிறக்கியதில் மத்திய அமைச்சர் உமாபாரதி டும் கொந்தளிப்பில் இருக்கிறார்.
பாஜகவின் பிரசார பீரங்கியாக, அத்வானி காலத்தில் அவரது தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் உமாபாரதி. ஆனால் பாஜகவை அமித்ஷா- மோடி அணி கைப்பற்றிய பின்னர் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டங்களில் உதாசீனப்படுத்தப்பட்டனர். இருந்த போதும் உமாபாரதி மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் உமாபாரதியையும் ஓரம்கட்டும் வகையில் இந்துத்துவா தீவிரவாதியான சாத்வி பிரக்யாசிங்கை போபால் வேட்பாளராக களமிறக்கியது பாஜக. அவரும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வருகிறார்.
இது தொடர்பாக உமாபாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய பிரதேசத்தில் என்னுடைய இடத்துக்கு பிரக்யாசிங் தாக்கூர் முன்னிறுத்தப்படுகிறாரா என நீங்கள் கேட்கிறீர்கள். அவர் மிகப் பெரிய சாது.
என்னையும் அவரையும் ஒப்பிடவே கூடாது. நான் மிகச்சாதாரணமானவர். முட்டாள்தனமான படைப்பு நான்.. என கொந்தளிப்பை 'கூலாக' காட்டினார் உமாபாரதி.












Click it and Unblock the Notifications