வட கர்நாடகாவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும்- பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

கர்நாடகாவில் கடந்த பாஜக அரசில் சர்க்கரை உற்பத்தி துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் உமேஷ் கத்தி. இவர் வட கர்நாடகாவிலுள்ள பெல்காமை சேர்ந்தவர்.
தற்போதும் பாஜகவில் இருந்து பெல்காம் மாவட்டம் ஹுக்கேரி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தெரிவித்த ஒரு கருத்து மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ள வட கர்நாடகாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். காவிரி பாயும் தென் கர்நாடகாவில் அதிகப்படியான கன்னட அமைப்புகள் உள்ளன. எனவே தென் கர்நாடகா சார்ந்த எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்கள் தொழில் மற்றும் விவசாயத்துறையில் முன்னணியில் உள்ளன.
ஆனால் ஹூப்ளி, பெல்காம், குல்பர்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வட கர்நாடக பகுதிகளில் தொழில்துறையில் சொல்லிக்கொள்ளும்படி எந்த சாதனையும் நடக்கவில்லை. மேலும் கல்வியறிவிலும் அம்மக்கள் பின்தங்கியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு உமேஷ் கத்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதனிடையே உமேஷ் கத்திக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட செலுவளி (போராட்டம்) வாட்டாள் கட்சி தலைவர் நாகராஜ் கூறுகையில், "ஒருங்கிணைந்த கர்நாடகாவை உருவாக்க எத்தனை பேர் ரத்தம் சிந்தினர் என்பது உமேஷ் கத்திக்கு தெரியாது. அவர் பிறக்கும் முன்பிருந்தே நான் கர்நாடக நலனுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறேன். வட கர்நாடகாவிற்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக போராட முன்வந்தால் உமேஷ் கத்தியுடன் நானும் மற்ற கன்னட அமைப்புகளும் போராட தயாராக உள்ளோம். ஆனால் தனி மாநில கோரிக்கையை யாரும் எழுப்ப கூடாது" என்றார்.
பெல்காம் மாவட்டத்தில் மராட்டியர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களுக்கும், கன்னடர்களுக்கும் அவ்வப்போது தகராறு எழுந்துவருகிறது. எனவே மராட்டியர்களின் வாக்குகளை பெறுவதற்காக உமேஷ் கத்தி இவ்வாறு பேசியுள்ளதாக கன்னட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. வட கர்நாடகாவை தனியாக பிரித்து அதன் முதல்வராக தனக்கு ஆசை என்று ஏற்கனவே உமேஷ் கத்தி ஒருமுறை பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications