பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 2-ந் தேதி வேலை நிறுத்தம்... மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்
டெல்லி : மத்திய அரநின் நடவடிக்கையைக் கண்டித்து செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளுக்கு தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் மத்திய அரசு முடிவு செய்தது. இதேபோல், ‘பேமெண்ட்' வங்கிகள் தொடங்க புதிய உரிமங்களை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து இருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாராக் கடன்களை வசூலிப்பதில் பெரும் அளவில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறியும் நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்து உள்ளன.
இதற்கான வேலை நிறுத்த நோட்டீசை பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகங்களுக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 பொதுத்துறை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அளித்தன.
வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பால், 2-ந் தேதி அன்று பொதுத்துறை வங்கிகளின் சேவை பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications