Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

23 வருஷத்துல இதுதான் முதல் விபத்து.. 'தேஜஸ்' ஜெட் குறித்து வெளியான ஆச்சரியமான தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த தேஜஸ் விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ் அறிமுகப்படுத்தப்பட்டு 23 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முதல் விபத்து இதுதான் என்பதால் விபத்து குறித்த விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.

நேற்று மதியம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் மாணவர் விடுதியில் இருந்த மாணவர்களுக்கு திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டிருக்கிறது. மாணவர்கள் வெளியே வந்து பார்த்தபோது கரும் புகையை எழுப்பியவாறு பெரும் தீ எரிந்துக்கொண்டிருந்திருக்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ராணுவம் அந்த பகுதியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது.

Unknown facts about Tejas fighter jet that crashed after 23 years

அதன் பின்னர்தான், அந்த பகுதியில் போர் விமானம் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதே உள்ளூர் மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது. விபத்தில் சிக்கியிருந்தது 'தேஜஸ்' விமானம். இது அனைத்து காலநிலையிலும் இயங்கக் கூடிய 4.5 தலைமுறை நவீன போர் விமானமாகும்.

அதைவிட முக்கியமான விஷயம், தேஜஸ் விமானம் இதற்கு முன்னர் இப்படியான விபத்துகளில் அடிக்கடி சிக்கியது இல்லை. கடைசியாக 2001ம் ஆண்டு இதனை பரிசோதித்து பார்க்கும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு எந்த விபத்தும் பதிவாகவில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த விமானம் எப்படி, விபத்தில் சிக்கியது? என ராணுவ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

மறுபுறம் தேஜஸ் விமானம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் தேஜஸ் ஒரு சூப்பர் சோனிக் விமானமாகும். ஒலியை விட வேகமாக பறக்கும் திறன் கொண்ட விமானங்களை சூபர்சோனிக் என்று கூறுவார்கள். 1984ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்த ஆண்டுதான் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியை (ADA) இந்திய அரசு தொடங்கியது. இதற்கு முன்னர் இருந்த மிக் 21 விமானத்தை தொடர்ந்து இது உருவாக்கப்பட்டது.

இலகு ரகத்தில், துல்லியமாக இலக்கை தாக்கிய அழிக்கும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் தேஜஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட விமானங்கள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள் விமானப்படையினராலும், இரட்டை இருக்கை கொண்ட விமானங்கள் கடற்படையினராலும் இயக்கப்படுகிறது.

இது அளவில் சிறியதாக இருப்பதாலும், வெயிட் குறைவு என்பதாலும் எதிரியுடன் மோதும்போது உடனடியான திருப்பங்களை மேற்கொள்ளவும், பதில் தாக்குதல் கொடுக்கவும் இதனை வேகமாக இயக்க முடியும். கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்த விமானங்கள் நமது விமானப்படையில் இருக்கின்றன. தற்போது நம்மிடம் இருக்கும் மிக் 21 ரக விமானங்களை தேஜஸ் விமானங்களாக அப்கிரேட் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

நேற்று நடந்த விமான விபத்தை பொறுத்த அளவில், விமானி முன்கூட்டியே பாராசூட்டை பயன்படுத்தியதால் நல்வாய்ப்பா உயிர் பிழைத்திருக்கிறார். இப்படி பத்திரமாக வெளியேறுவதை 'எஜெக்ட்' என்று சொல்வார்கள். ஆபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தாலும், அந்த வீரர் மீண்டும் போர் விமானத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+