ஜூலை 8ல் தொடங்கிய "போர்".. சூடு குறையாமல் தகிக்கும் காஷ்மீர் #uriattack
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு கடந்த ஜூலை 8ம் தேதி முதலே போர்க்களமாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவம் இன்று மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
ஜூலை 8ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களை ஒடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த துப்பாக்கிச் சூடுகளில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் இன்று உச்சகட்ட தாக்குதல் நடந்தேறியுள்ளது. எல்லையை ஒட்டியுள்ள பாரமுல்லா மாவட்டம், யூரி பகுதியானது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது. அங்குள்ள ராணுவ அலுவலகத்தைத்தான் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நான்கு பேர் சேர்ந்து நடத்திய தாக்குதலில் நமக்கு பேரிழப்பாக போய் விட்டது. 17 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். புர்ஹான் வானியை சுட்டுக் கொன்றதற்குப் பழி தீர்க்கும் வகையில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications