Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிணத்தை" வைத்து சம்பாதிக்கும் பணப் பேய்கள்.. கோமியம் குடித்து பரபரப்பாக்கிய எம்எல்ஏ ஆவேசம்!

அலோபதி டாக்டர்கள் குறித்து பாஜக எம்எல்ஏ குற்றஞ்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: "சில அலோபதி டாக்டர்கள் ஐசியூவில் இறந்த கொரோனா நோயாளிகளை காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள்.. செத்து போன சடலங்களை வைத்தும் சம்பாதிக்கும் பண பேய்கள் இவர்கள்.. நாட்டை ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்ல ஆயுர்வேத மருத்துவமே சிறந்தது என்று பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா ராம்தேவ் பாஜகவின் ஆதரவாளர்களில் ஒருவர்.. இவரது யோகாசனங்களாலும், இயற்கையோடு ஒன்றிணைந்துள்ள மருந்துகளாலும் ஏராளமானோர் நன்மை அடைந்துள்ளனர்...

இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, பாபா ராம்தேவ் அலோபதி டாக்டர்கள், அலோபதி மருத்துவம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார்..

 டாக்டர்கள்

டாக்டர்கள்

அலோபதி மருத்துவம் ஒரு "முட்டாள்தனமான அறிவியல்" என்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.. உலகம் முழுவதும் பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் வேலையில் டாக்டர்கள் ஈடுபட்டு வரும்போது, பாபா ராம்தேவ் கருத்துக்கு கண்டனங்களும் எழுந்தன..

 வீடியோ

வீடியோ

அத்துடன், அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடுப்போம் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது. ஆனால், பாபா ராம்தேவ் இன்னொரு வீடியோ போட்டு அதிர்ச்சி கிளப்பினார்.. அந்த வீடியோவில் "அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது.. அவர்கள் ஏன் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

 வீடியோ

வீடியோ

அந்த பரபரப்பே முடிவடையாத நிலையில், உபியின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கும் அதேபோல ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்... பைரியா தொகுதி எம்எல்ஏதான் இந்த சுரேந்திர சிங். சில நாட்களுக்கு முன்புகூட, இவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், திடீரென மாட்டு கோமியத்தை எடுத்து குடித்துவிட்டார்.. பிறகு பேசும்போது, இந்த கோமியத்தின் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்..

 குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

நான் இன்னைக்கு 18 மணி நேரமும் சுறுசுறுப்பா வேலை செய்யவும், எப்பவுமே ஆரோக்கியமா இருக்கவும் காரணமே இந்த கோமியம்தான். ஆனால், இதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும்.. அதாவது 2 அல்லது 3 மூடி கோமியத்தை கொஞ்சம் குளிர்ந்த நீரில் கலந்து குடிக்க வேண்டும்.. இதை குடித்தபிறகு அரை மணி நேரத்தக்கு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது..

 சடலங்கள்

சடலங்கள்

இப்படிப்பட்ட சூழலில், அலோபதி டாக்டர்கள் சிலர் மீது சுரேந்திரா குற்றஞ்சாட்டி உள்ளார்.. சில அலோபதி டாக்டர்கள் ஐசியுவில் இறந்த நோயாளிகளை காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள்.. செத்து போன சடலங்களை வைத்தும் சம்பாதிக்கும் பண பேய்கள் இவர்கள்.. நான் அலோபதி மருத்துவம் மோசமானது என்று சொல்லவில்லை.. ஆனால், அதில் உள்ள நல்லவைகளை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை..

 யோகா

யோகா

அதேநேரம் எத்தனையோ அலோபதி டாக்டர்கள் நேர்மையாக வேலை பார்த்து வருவதையும் வரவேற்கிறேன்.. பாராட்டுகிறேன்.. எனினும், ஆயுர்வேத மருத்துவ முறையே சிறந்தது.. ஆரோக்கியமாக நம் நாட்டை மாற்றும் திறன் படைத்தது.. அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யோகாவையும் ஆயுர்வேதத்தையும் ஊக்குவிப்பதே என்னுடைய வாழ்க்கையின் லட்சியம்.. என்று கூறியுள்ளார். இந்த கருத்து மறுபடியும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+