ராகுல் வந்த நேரம் பாஜகவுக்கு ரொம்ப நல்ல நேரம்.. உ.பி. முதல்வர் கிண்டல்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வந்துள்ள நேரம் பாஜகவுக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டது பாஜகவுக்கு நல்லதாக அமைந்துள்ளது.

குஜராத் மக்களை மத ரீதியாக ராகுல் காந்தி பிரிக்கப் பார்த்தார். அவரது பிரச்சாரம் அப்படித்தான் இருந்தது. ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டனர் என்று கூறியுள்ளார் யோகி.
குஜராத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்தவர் யோகி. அப்போது ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துப் பிரச்ச்சாரம் செய்தார். ராகுல் காந்தி கோவில்களுக்குப் போனதையும் அவர் கடுமையாக சாடிப் பேசி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications