For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கிமுனையில் பெண்ணை ஆட வைத்து, பணத்தை வீசி கான்ஸ்டபிள் அட்டூழியம்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் கலை நிகழ்சசி நடந்த மேடையில் ஏறி பெண் டான்ஸரை துப்பாக்கி முனையில் ஆட வைத்ததுடன் அவர் மீது பணத்தை வீசியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண் டான்ஸர் ஒருவர் மேடையில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் கான்ஸ்டபிள் சைலேந்திர சுக்லா குடிபோதையில் மேடையில் ஏறி துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை நடனமாடுமாறு மிரட்டினார். அந்த பெண் ஆடி, ஆடி சோர்வடைந்தும் சுக்லாவின் மிரட்டலுக்கு பயந்து ஆடிக் கொண்டே இருந்தார்.

UP cop seen dancing and throwing cash at dancer

பின்னர் சுக்லா தான் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை அந்த டான்ஸரின் மீது மழையாக பொழிந்தார். இந்த சம்பவம் பற்றி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுக்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

{ventuno}

மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் தான் போலீசாருக்கு துணிச்சல் வந்துள்ளது. துப்பாக்கிமுனையில் பெண்ணை ஆட வைத்த சுக்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

English summary
In UP, a police constable made a woman dancer to perform at gunpoint and showered money on her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X