பலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை... நீதி கோரி பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய உ.பி பெண்!
தன்னை பலாத்காரம் செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பிரதமருக்கு ரத்தத்தில் எழுதியுள்ள கடிதம் நெஞ்சை பதற வைக்கிறது.
பாரபங்கி: தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்திர பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளார்.
உ.பி., மாநிலம் ரேபரேலியில் பொறியியல் படிக்கும் தனது மகளை பலாத்காரம் செய்து மிரட்டி வருவதாக, அவரது தந்தை கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம், போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாரபங்கி பகுதியை சேர்ந்த திவ்யா பாண்டே மற்றும் அங்கித் சர்மா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இளம்பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்து ஆபாச படங்களை பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரின் விசாரணையால் விரக்தியடைந்துள்ளதாக கடந்த ஜனவரி 20ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தரப்பில் குற்றவாளிகள் மீது போட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏனெனில் அவர்கள் அதிகார பலம் படைத்தவர்கள். இதனால் குற்றவாளிகள் வழக்கை வாபஸ் வாங்குமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்று அந்தப் பெண் உருக்கமாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications