ஆர்.டி.ஐ. ஃபைல் செய்த பாட்டி: பேரனை டிஸ்மிஸ் செய்த பள்ளி நிர்வாகம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாட்டி ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக விண்ணப்பித்த காரணத்தினால் 10 வயது மாணவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ளது சரஸ்வதி சிசு வித்யா மந்திர். அந்த பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தவர் அமோக் பதக்(10). அவரது பாட்டி மால்தி தேவி. சமூக ஆர்வலரான தேவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து அறிய விண்ணப்பித்தார்.
பள்ளியின் கட்டண முறை, அந்த பணத்தை நிர்வாகம் எப்படி செலவு செய்கிறது உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டிருந்தார். பள்ளி நிர்வாகம் போலியான ஆவணங்களை காட்டி உயர்நிலைப்பள்ளிக்கு அனுமதி வாங்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி பள்ளி நிர்வாகம் அமோகின் குடும்பத்தினரை வரவழைத்து மாணவரை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தது.
இது குறித்து தேவி கூறுகையில்,
நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டு விண்ணப்பித்ததில் இருந்து பள்ளியில் எனது பேரனை குறி வைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் அவனை அடித்துள்ளனர். என் பேரனா அந்த விண்ணப்பத்தை கொடுத்தார். பின்னர் அவரை எதற்காக பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications