ஹெலிகாப்டர் ஊழல் விசாரணையை கண்டு ஏன் அஞ்சுகிறது காங்.? உண்மையை கண்டுபிடிப்போம்: பாரிக்கர்
டெல்லி: ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விசாரணையை கண்டு காங்கிரஸ் கட்சி அச்சப்படுகிறது; இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் நாங்கள் கண்டுபிடிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
லோக்சபாவில் ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது மனோகர் பாரிக்கர் பேசியதாவது:
எஸ்.பி.தியாகி, கவுதம் கைத்தான் ஆகியோர் சிறிய அளவிலேயே ஹெலிகாப்டர் ஊழலில் பங்கு செலுத்தியுள்ளனர், ஊழல் எனும் கங்கை நதியில் இவர்கள் கைகளைக் கழுவியுள்ளனர் அவ்வளவே, ஆனால் நதி எங்கே செல்கிறது என்பதை அரசு கண்டுபிடிக்கத்தான் போகிறது.

கண்டுபிடிப்போம்
இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பெற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. 12 விவிஐபி ஹெலிகாப்டர்களுக்கான ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தில் பயனடைந்தோர் யார் யார் என்று அரசு நிச்சயம் கண்டுபிடிக்கும்.

அந்த கங்கை எங்கே?
இந்த விசாரணை குறித்து காங்கிரஸ் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை. கங்கை எங்கே போகிறாள் என்பது உங்களுக்குத் தெரிந்துள்ளதாகவே படுகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலியில் நவம்பர் 2011-ல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் முயற்சியையும் தொடர்ந்தது.

சாக்கு போக்கு
அகஸ்டாவெஸ்ட்லேண்டின் மூல நிறுவனமான ஃபின்மெக்கானியாவின் அதிகாரிகள் 2013-ல் கைது செய்யப்பட்ட பிறகுதான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரினார். இதற்கு முன்னர் அரசு நிறுவனத்திடம் எழுதி கேட்கவில்லை, மாறாக தூதரகத்திடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றது. அதாவது இது எப்படி இருக்கிறது என்றால், நடவடிக்கை எடுக்க விரும்பமில்லாத போது கமிட்டி அமைப்பது போல் உள்ளது.

வேறுவழியில்லாமல்...
ஃபின்மெக்கானியா அதிகாரி கைதுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்துக்குள்ளானது. அது தானாகவே விசாரணை மேற்கொள்ள விரும்பவில்லை. சிபிஐ இது தொடர்பாக மார்ச் 2013-ல் முதல் தகவலறிக்கை பதிவு செய்தது. ஆனால் எஃப்.ஐ.ஆர். நகல் அமலாக்கப் பிரிவிடம் டிசம்பர் வரை அளிக்கப்படவில்லை. 2012-லேயே ஊழல் தடுக்கப்பட்டிருக்க முடியும்.

இப்படி ஒரு ஒப்பந்தமா?
இந்த ஒப்பந்தத்திற்கான டெண்டரை சமர்பித்தது இத்தாலி அகஸ்டாவெஸ்ட்லேண்ட். ஆனால் ஒப்பந்தம் அளிக்கப்பட்டதோ பிரிட்டனில் உள்ள அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பன்னாட்டு நிறுவனத்துக்கு. அது மூல உற்பத்தி நிறுவனமல்ல. டெண்டர் சமர்பித்தது ஒரு நிறுவனம், ஒப்பந்தம் அளிக்கப்பட்டது மற்றொரு நிறுவனத்திற்கு, இப்படி நான் எங்கும் பார்த்ததில்லை. இதில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் உள்ளன. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கும் நடைமுறையை தொடங்கிய போது டெண்டர் நடைமுறைகளில் அதிக நிறுவனங்களை உள்ளடக்கியது, ஆனால் பின்னால் வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இதனை அகஸ்டாவெஸ்ட்லேண்டிற்கு மட்டும் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொண்டது.
அகஸ்டா நிறுவனத்துக்குச் சாதகமாக விலைகளும் அதிகப்படுத்தப்பட்டன. ஒரே நிறுவனம்தான் ஒப்பந்தத்தைப் பெறும் எனும்போது விலைகளை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications