சட்டசபையில் நாற்காலிகளை தூக்கி வீசி உறுப்பினர்கள் கூச்சல்... ஒத்தி வைத்த சபாநாயகர்
காஷ்மீர் சட்டசபையில் கத்தி கூச்லிட்ட உறுப்பினர்கள் நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி வீசினர். இதனால் சட்டசபையை சபாநாயகர் ஒத்தி வைத்தனர்.
ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி வீசியதால் சபைக்காவலர்கள் காயமடைந்தனர்.
காஷ்மிர் சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, அரசியல் சட்டம் 370வது விரிவு குறித்து கருத்துக் கூறினார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர் அதிருப்தி தெரிவித்து பிரச்சனை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்களும் முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
சபையில் கூச்சல் குழப்பம்
பதிலுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். இதனால் சபையில் பெறும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பறந்த மேசை, நாற்காலிகள்
உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நாற்காலி, மேசை, மைக்குகள் என அனைத்தையும் தூக்கி எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைக் கட்டுப்படுத்த சபாநாயகர் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் எடுபடவில்லை.
30 நிமிடம் ஒத்திவைப்பு
இதையடுத்து சபாநாயகர் அவையை 30 நிமிடம் ஒத்திவைத்தார். உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போது முதல்வர் மெகபூபா முப்தி சட்டசபையில் இல்லை.
சபைக்காவலர் காயம்
சட்டசபையில் நடந்த இந்த அமளி துமளியில் சபைக்காவலர் ஒருவர் காயமடைந்தார். உறுப்பினர்களின மோதலால் காஷ்மீர் சட்டசபை போர்க்களம் போல் காட்சியளித்தது.












Click it and Unblock the Notifications