டெஹல்கா விவகாரம்: விசாரணை கமிஷன் தலைவராக இருக்க ஊர்வசி புதாலியா மறுப்பு
டெல்லி: டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை கமிஷன் தலைவராக இருக்க சமூக ஆர்வலர் ஊர்வசி புதாலியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அவரது பத்திரிகையில் பணியாற்றிய ஒரு பெண் பத்திரிகையாளர், அவருக்கு எதிராக பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரியிடம் பாலியல் புகார் கொடுத்தார். பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய தருண் தேஜ்பாலுக்கு எதிராக கோவா மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் அமைப்பும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து டெஹல்கா பத்திரிகை சார்பில் விசாரணை குழு அமைக்கப்படும் சோமா சவுத்ரி கூறினார்.
இந்த கமிஷனின் தலைவராக பெண்கள் உரிமைகள் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஊர்வசி புதாலியா இருப்பார் என தெரிவித்தார். இந்நிலையில் விசாரணை கமிஷனின் தலைவராக இருக்க ஊர்வசி புதாலியா மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications