உ.பி.யில் துப்பாக்கி முனையில் கடத்தி மாணவி பலாத்காரம்: 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ரேபரேலி : உத்திரப்பிரதேசத்தில் 11ம் வகுப்பு மாணவியை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியே காரில் வந்த 4 இளைஞர்கள், துப்பாக்கி முனையில் மாணவியைக் கடத்தி உள்ளனர்.

Uttar pradesh : 3 held for raping a school girl

காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அம்மாணவியை நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மீண்டும் மாணவியை அவரது வீட்டின் அருகேயே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சுபேஷ் வர்மா, பால்போசிங் மற்றும் சூர்யகாந்த் என்ற 3 இளைஞர்களைக் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 4வது குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+