உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிப்பாக தொடங்கியது
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் 73 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
லக்னோ: 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, 15 மாவட்டங்களைச் சேர்ந்த 73 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று தொடங்கி வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக்தள் கட்சிகள் தனித் தனியாகவும் களத்தில் போட்டியிடுகின்றன.

முதற்கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதியில் இன்று நடக்கிறது. இதில் முஸ்லீம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 73 தொகுதயில் மொத்தம் 839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.6 கோடி பேர் வாக்களிக்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
ஷாம்லி, அலிகார், முசாபர்நகர், மதுரா, புலன்ஷர் மற்றும் ஆக்ரா ஆகியா முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகள் இதில் உள்ளன. 2 கோடியே 60 லட்சம் பேர் இன்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மத்தியில் மும்முனை போட்டி நிலவுகிறது. மார்ச் 8ஆம் தேதி வரை வாக்குப்பதிவு 7 கட்டமாக நடைபெறுகிறது. மார்ச் 11ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications