உத்தரகண்ட் முதல்வருக்கு வந்த சோகம்... போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி!
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் (ரூரல்), கிச்சா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஹரீஷ் ராவத் தோல்வி அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம முதல்வர் ஹரீஷ் ராவத் போட்டியிட்ட ஹரித்வார் (ரூரல்), கிச்சா ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வி கண்டுள்ளார்.

உத்தரகண்டுக்கு கடந்த 15-ஆம் தேதி சட்டடபைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. பாஜக 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், இதர கட்சிகள் இரு இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
முதல்வர் ராவத், ஹரித்வார் (ரூரல்) , கிச்சா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். ஹரித்வார் தொகுதியில் தான் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் மாநில அரசு அனுமதி தராமல் சிலையைத் தூக்கி பூங்காவில் போட்டு அவமானப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications