வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது: டிச.25ல் அறிவிப்பு வெளியாகும்?
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி மோடி அரசு இதற்கான அறிவிப்பினை வெளியிடலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு சேவை செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் ‘பாரத ரத்னா' வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாய்க்கு வரும் 25ந் தேதி 89 வயது முடிந்து 90 வயது பிறக்கிறது. அப்போது வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதுகொடுப்போம் என பா.ஜ.க அறிவித்திருந்தது.
பிரதமர் மோடி, வாஜ்பாயை தன் குருவாக ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். வாஜ்பாயின் பிறந்த நாளை மோடி ‘நல்லாட்சி தினமாக' கொண்டாட வேண்டும் என மோடி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை ஆண்டு முதல் பாஜக பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். 5ஆண்டுகாலம் முழுமையாகவும், சிறப்பாகவும் ஆட்சி புரிந்தார். அதேபோல டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மதன் மோகன் மால்வியாவிற்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications