புதுசு, புதுசா கிளம்புறாங்களே.. காதலர் தினத்திற்கு பேங்க் லோன் கேட்டு விண்ணப்பித்த வாலிபர்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பாரத் ஸ்டேட் வங்கி, தனது ஊழியர் ஒருவர் காதலர் தினத்தை கொண்டாட கடன் கோரிய மனுவை நிராகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தின் சூடா நகர பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரிந்து வருபவர் திக்விஜய் சிங்(25).

இவர் காதலர் தினத்தை கொண்டாட வங்கியில் ரூ.42,970 கடன் கோரியுள்ளார். வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் பண்டிகைக் காலங்களில் ஒரு மாத ஊதியத்தை கடனாக பெற சலுகைகள் உள்ளது. அந்த கடன் தொகையை 10 தவணையாக ஊழியர்கள் செலுத்தலாம். ஆனால், குறிப்பிட சில பண்டிகைகளுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும் என்கிறது வங்கி விதிமுறை.
அந்த பண்டிகை பட்டியலில் காதலர் தினம், அப்பா தினம், அம்மா தினம், போன்றவைகள் கிடையாது. பசந்த் பஞ்சமி விழாவுக்காக கடன் கேட்பதற்கு பதிலாக காதலர் தினம் என்று தப்பாக குறிப்பிட்டு விட்டதாக திக்விஜய் சிங் நண்பர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications