பொதுச் சொத்துக்களை தொண்டர்கள் சேதப்படுத்தினால் தலைவருக்கும் தண்டனை….!
டெல்லி: போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் தொண்டர்களுக்கு கடும் தண்டனை விதிப்பேதோடு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர்களுக்கும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்ததைஙக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
போராட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின்போது பொதுச் சொத்துக்களை சேதம் விளைவிப்போருக்கு தண்டனையைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. அதில், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் வலுவான மாற்றம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதுதொடர்பான கருத்துக்களை ஜூலை 20 ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சட்டத்திருத்தத்தின் வரைவு நகல் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தினால், அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
பேருந்துகள், ரயில்கள், அரசு கட்டடங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பொதுச் சொதுச் சொத்துக்களுக்கு தீவைத்தாலோ அல்லது வெடிவைத்து சேதம் விளைவித்தாலோ தற்போது இருந்து வரும் ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதத்துடன் பத்தாண்டுகளாக அதிகரிக்கப்படும்.
மேலும் சேதம் விளைவிக்கும் தொண்டர்களின அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தண்டனை வழங்கும் வகை சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் மற்றும் தண்டனை பெறும் நபரை விடுவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தால் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது.
இந்தத் திருத்தங்களைக் கொண்டுவர ஏதுவாக, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம்-1984 மாற்றி அமைக்கப்படும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications