For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலுக்கு முன்னதாகவே... நான் வெற்றி பெற்று விட்டதாக மக்கள் கூறுகிறார்கள்... மோடி பேச்சு

Google Oneindia Tamil News

வாரணாசி: தேர்தலுக்கு முன்னதாகவே, நான் வெற்றி பெற்று விட்டதாக மக்கள் கூறுகிறார்கள் என்று வாரணாசி தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி, பிரதமரின் வேட்புமனுவை காவலாளி ஒருவரும், மகளிர் கல்லூரி முதல்வரும் முன்மொழிந்தனர். வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.

Varanasi Peoples saying I have won, PM Modi talks

கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இந்தமுறை வாரணாசியில் மட்டும் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வாரணாசி தொகுதி மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி, 5 ஆண்டுகளுக்கு பிறகு என்னை மீண்டும் ஆசீர்வதிக்கின்றனர் என்றார்.

 மோடி 'குட்புக்கில்' ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! தேனியில் காலில் விழுந்தார்.. வாரணாசிக்கும் விரைந்தார் மோடி 'குட்புக்கில்' ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! தேனியில் காலில் விழுந்தார்.. வாரணாசிக்கும் விரைந்தார்

அதற்கு எடுத்துக்காட்டாக, நேற்று நடந்த ரோடு ஷோ இருந்தது. நான் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதாக மக்கள் கூறுகிறார்கள் என்று தெரிவித்த மோடி, வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவது பெருமிதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக பேசிய மோடி, முதன்முறையாக அரசுக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசுவதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக நேர்மையுடன் தனது கடமையை நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
Modi: I deeply express gratitude towards people of Kashi. They have again blessed me after 5 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X