ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் மோடிக்கு 1000 ராக்கிகள்- வாரணாசி பெண்கள் முடிவு
வாரணாசி: குடும்ப உறவுகளின் வலிமையையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன் விழாவினை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைக்க பெண்கள் முடிவு செய்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் நாளில் பெண்கள் ராக்கி என்னும் கயிற்றை தங்களுடைய சகோதரர்கள் கையிலும், சகோதரர்களாக நினைக்கும் ஆண்களின் கைகளிலும் கட்டி சகோதரத்துவத்தைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

அத்தகைய புனிதமான ரக்ஷா பந்தன் விழாவானது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று இந்தியாவில் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மோடியை சகோதரராக நினைக்கும் வாரணாசி தொகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள், தங்களுடைய சகோதரரான மோடிக்கு ஆயிரம் ராக்கிக் கயிறுகளையும், இனிப்பு பதார்த்தங்களையும் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications