ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள் ராஜினாமா
ராஜஸ்தான், சட்டீஸ்கர் முதல்வர்கள் ராஜினாமா செய்தார்கள்
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சத்தீஷ்கர் முதல்வர் ரமன் சிங் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்போதே, ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றாலும், பின்னர் மீண்டும் பாஜக முன்னிலை பெற்றது. இறுதியில் பாஜவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அங்கு 199 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 73 தொகுதிகளை கைப்பற்றி தோல்வி அடைந்தது. பகுஜன் சமாஜ் 6 இடங்களையும், மற்ற கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றின.

காங்கிரசுக்கு வாழ்த்து
இதையடுத்து, அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து கூறும்போது, "ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸ் மும்முரம்
ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன்" என்றார். இதையடுத்து, ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வலுவான முன்னிலை
ஆனால், சட்டீஸ்கரில் ராஜஸ்தான் போல இல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வலுவான முன்னிலை பெற்றது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் 67 இடங்களை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தது. பெரும்பான்மைக்கு 46 இடங்களே தேவை. ஆனால் பாஜகவோ வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

15 ஆண்டு காலம்
இதன் மூலம், இந்த மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாஜவின் தோல்வியை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரமன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.

சுயபரிசோதனை
இதுகுறித்து ரமன் சிங் சொல்லும்போது, "சட்டசபை தேர்தலில், பாஜக தோல்வியை தழுவியதற்கான காரணங்கள் குறித்து, சுய பரிசோதனை செய்ய உள்ளோம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications