கோலார் தங்க சுரங்கம் பக்கம் பார்வையைத் திருப்பும் வேதாந்தா குழுமம்
பெங்களூர்: கர்நாடகாவின் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை சிறப்பாக செயல்படுத்தும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கோலார் தங்க வயல்
உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது.

இருப்பு குறைவால் மூடல்
ஆனால் 2001ஆம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

லட்சக்கணக்கான தமிழர் தவிப்பு
திடீரென தங்க சுரங்கம் மூடப்பட்டதால் பணியாற்றிய பல்லாயிரம் ஊழியர்களும் சார்ந்திருந்த லட்சக்கணக்கான தமிழர்களும் வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பல நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

எப்போது மீண்டும் திறப்பு?
இந்நிலையில் 1994, 97 மற்றும் 2000மாவது ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மூன்று நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் 2010ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தன. அதில் கோலார் தங்க சுரங்கத்தில் 30 லட்சம் சன் இருப்பதாகவும் மேலும் 15 ஆண்டுகளுக்கு தங்கம் தோண்டியெடுக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கோலாரில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தும் தொடங்கப்படவில்லை.

நம்பிக்கை தந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நீண்ட தாமதத்துக்குப் பின்னர் கோலார் தங்க வயலை மூடியது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில் பாரத் கோல்ட்மைன் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை விற்க சர்வதேச டெண்டர் கோரும் மத்திய அரசின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதனால் கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறக்கப்படும் நிலை உருவானது.

அரசு மும்முரம்
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுரங்க அமைச்சகம், பாரத் கோல்ட்மைன் லிமிடெட் சொத்துகளை விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 9-ந் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறும் கோரியுள்ளது.

முன்வரும் வேதாந்தா குழுமம்
இந்த நிலையில்தான் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை செய்யும் என்று கூறியுள்ளார். தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் தங்கத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் பொருளாதார சரிவை மேம்படுத்த முடியும் என்பது அனில் அகர்வாலின் கருத்து.

வேதாந்தா ஏற்று நடத்தினால்..
அப்படி ஒருவேளை வேதாந்தா குழுமம் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்தினால் மீண்டும் லட்சக்கணக்கான தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications