வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை எதிர்க்கும் வழக்கு: 2-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

1993ம் ஆண்டு தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு அருகே வீரப்பனை தேடிச்சென்ற போலீஸ் வாகனம் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இவர்களில் சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் மற்றும் ஞானபிரகாசம் ஆகிய 4 பேருக்கும் 2002ம் ஆண்டு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தண்டனை பெற்ற 4 பேர் சார்பில் கடந்த 2004ம் ஆண்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவை 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 13ந்தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
இதனை எதிர்த்து 4 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்த வழக்கில் தான். எனவே, இது அரிதினும் அரிதான வழக்கு. சுமார் 20 ஆண்டுகளாக இந்த 4 பேரும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதேபோல், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவது குறித்து எந்த ஒரு கருத்தும் கேட்கப்படவில்லை.
20 ஆண்டுகளாக ஒருவர் சிறையில் தனது வாழ்க்கையை கழித்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை குறைந்தபட்ச சிறை தண்டனையாக குறைக்க வேண்டும் என்றார்.
இந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications