நீ பிராமணனா, ஷத்ரியனா?: குறும்புக்கார மாணவனை அடித்த ஆசிரியர்- வீடியோ இதோ
மங்களூர்: கர்நாடகாவில் குறும்பு செய்த மாணவனை ஆசிரியர் அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள வேத பாட சாலையில் ஆசிரியராக வேலை செய்பவர் சோமசுந்தர சாஸ்திரி. வேதம் கற்றுக் கொடுக்கும் அவர் சிறுவன் ஒருவர் வகுப்பறையில் குறும்பு செய்ததால் கோபம் அடைந்தார்.
இதையடுத்து அவர் ஏற்கனவே வலது கையில் மாவுக்கட்டுடன் இருக்கும் சிறுவனின் காதைப் பிடித்து திருகி, இடது கையை முறித்து அவரை அடித்தார். சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினார். நீ பிராமணனா, ஷத்ரியனா என அவர் சிறுவனை பார்த்து திரும்பக் திரும்ப கேட்டார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தலித் சேவா சமிதி தலைவர் சேஷப்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சோமசுந்தர சாஸ்திரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.