ஐடி ரெய்டால் ஜனாதிபதி கையால் விருது வாங்க முடியலையே - விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர் குடியரசுத்தலைவர் கையால் இன்று விருது பெற இருந்த நிலையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
டெல்லி: வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இன்று சோதனை நடத்தி தன்னை குடியரசுத்தலைவர் கையால் விருது பெற விடாமல் தடுத்து விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
உலக சுகாதார தினமான இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு குடியரசுத்தலைவர் அளிக்க இருந்த விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உலக சுகாதார தினமான இன்று குடியரசுத்தலைவர் சிறப்பு விருது அளிக்க இருந்தார். ஆனால் அவரது வீட்டில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
30 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள், கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் தன்னை வருமான வரித்துறையினர் கைதி போல நடத்தியதாக விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து விட்டதாகவும், ஜனாதிபதி விருது பெறுவதற்காக டெல்லி செல்ல விடாமல் தன்னை அடைத்து வைத்து விட்டதாகவும் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications