டெல்லி சட்டசபை தேர்தல்.. தேமுதிகவும் போட்டி! 27-ல் வேட்பாளர்கள் அறிவிப்பு!!

இதுகுறித்து டெல்லி தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: டெல்லியில் 12 லட்சம் தமிழர்கள் வசிக்கிறோம். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள்தான். அவர்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால் எவரும் தமிழர்களின் குறைகளை கேட்பது இல்லை.
டெல்லி மாநில அரசில் தமிழர்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியில் வரும் 27-ந்தேதி நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அக் கூட்டத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பெயர்களை விஜயகாந்த் அறிவிக்கிறார் என்றார்.
டெல்லியியின் ஜனக்புரி, ஆர்கே புரம், கரோல் பாக் ஆகிய தொகுதிகளில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அத்துடன் டெல்லி ஜந்தர் மந்தரில் கணிசமான எண்ணிக்கையில் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் காங்கிரஸ், பாஜகவின் பார்வையை தமது கட்சி மீது திருப்ப முடியும் என்பது தேமுதிகவின் நம்பிக்கை.












Click it and Unblock the Notifications