2016க்குள் அனைத்து கிராமங்களையும் “பிராட்பேண்ட்” மயமாக்க முடியும்.. டிராய்
டெல்லி: மத்திய அரசின் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கும் பிராட்பேண்ட் வசதி கிடைக்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும், இது சாத்தியமானதே என்று டிராய் தலைவர் ராகுல் குல்லார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிராய் தலைவர் ராகுல் குல்லார் , "நாட்டில் தற்போது 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் தற்போது அகன்ற அலைவரியான பிராட்பேண்ட் வசதி செய்து தர டிராய் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் 20 ஆயிரத்து 100 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியா இன்டர் நெட் பயன்பாட்டில் முன்னேறி வருவதை காணும் போது இவை சாத்தியமாக கூடும்.
மேலும் இந்த திட்டம் செயலாக்குவது என்பது மிகவும் எளிமையானது. முதலில் நான்கு மெட்ரோ நகரங்களை பிராட்பேண்ட் வசதியுடன் இணைக்க வேண்டும் அதனையடுத்து மெட்ரோ நகரங்களுடன் இரண்டாம் கட்ட நகரங்களை இணைக்க வேண்டும்.
பின்னர் அனைத்து தாலுகா மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைக்க வேண்டும். இந்த இணைப்புகள் அனைத்தும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க முடியும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ஏற்கனவே இரண்டு தனியர் நிறுவனங்கள் 75 சதவீத பிராட் பேண்ட் வசதியினை வழங்கிவருகின்றனர். இன்று ஒரு தனியார் நிறுவனம் அனைத்து மாவட்டங்களுக்கும் 89 சத வீத பிராட் பேண்ட் வசதியினை கொடுக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.அப்படி இருக்கும் நிலையில் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இந்த தி்ட்டம் சாத்தியமே" என தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications