2016க்குள் அனைத்து கிராமங்களையும் “பிராட்பேண்ட்” மயமாக்க முடியும்.. டிராய்
டெல்லி: மத்திய அரசின் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கும் பிராட்பேண்ட் வசதி கிடைக்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும், இது சாத்தியமானதே என்று டிராய் தலைவர் ராகுல் குல்லார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிராய் தலைவர் ராகுல் குல்லார் , "நாட்டில் தற்போது 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் தற்போது அகன்ற அலைவரியான பிராட்பேண்ட் வசதி செய்து தர டிராய் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் 20 ஆயிரத்து 100 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியா இன்டர் நெட் பயன்பாட்டில் முன்னேறி வருவதை காணும் போது இவை சாத்தியமாக கூடும்.
மேலும் இந்த திட்டம் செயலாக்குவது என்பது மிகவும் எளிமையானது. முதலில் நான்கு மெட்ரோ நகரங்களை பிராட்பேண்ட் வசதியுடன் இணைக்க வேண்டும் அதனையடுத்து மெட்ரோ நகரங்களுடன் இரண்டாம் கட்ட நகரங்களை இணைக்க வேண்டும்.
பின்னர் அனைத்து தாலுகா மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைக்க வேண்டும். இந்த இணைப்புகள் அனைத்தும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க முடியும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ஏற்கனவே இரண்டு தனியர் நிறுவனங்கள் 75 சதவீத பிராட் பேண்ட் வசதியினை வழங்கிவருகின்றனர். இன்று ஒரு தனியார் நிறுவனம் அனைத்து மாவட்டங்களுக்கும் 89 சத வீத பிராட் பேண்ட் வசதியினை கொடுக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.அப்படி இருக்கும் நிலையில் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இந்த தி்ட்டம் சாத்தியமே" என தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications