மன்மோகன்சிங் காலத்தில் நியமிக்கப்பட்ட பிரதமரின் இணைச்செயலாளர் மாற்றம்
டெல்லி: சுமார் ஐந்தாண்டுகளாக, பிரதமரின் இணை செயலாளராக பதவி வகித்த ஜாவத் அஷ்ரப் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக பதவி வகித்த வினய் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2012ல் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பிரதமரின் கூடுதல் செயலாளராக பதவிக்கு அமர்த்தப்பட்ட ஜாவத் அஷ்ரப், மோடி பிரதமரான பிறகும் அதே பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில், அவர் தற்போது அப்பதவியில் இருந்துவிடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக பதவி வகித்த வினய் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அஷ்ரப்பிடமிருந்து பணி தன்மையை வினய் கற்க வேண்டும் என்றும், அதன்பிறகே, அப்பதவியில் அவர் அமர்த்தப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக இருந்த விக்ரம் துரைசாமி, உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட பிறகு அப்பதவிக்கு நியமனம் ஆனவர் வினய். தற்போது துரைசாமி, தென்கொரிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், வெளியுறவு விவகாரங்களுக்கான அதிகாரிகளை கண்காணித்து தேவைப்படும் மாற்றங்களை முன்னெடுத்துவருவதாக கூறப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications