மோடியில் வாரணாசி தொகுதியில் கலவரம்: ஊரடங்கு உத்தரவு
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.
கடந்த 22ம் தேதி வினாயகர் சிலைகளை விதிகளை மீறி கங்கை ஆற்றில் கரைக்க சென்றவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாலும், கல்வீச்சில் ஈடுபட்டதாலும், கடைகளை தீ வீத்து எரித்ததாலும் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதைக் கண்டித்து நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. மதத் தலைவர்கள், காங்கிரஸ் எம்எல்ஏ, பாஜகவினர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சிலும் கலவரத்திலும் ஈடுபட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பல வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து போராட்டம் தீவிரமடையவே இதை மதக்கலவரமாக மாற்ற சிலர் முயலலாம் என்பதால் வாரணாசியின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சமீப காலமாக உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்களும், மதம் சார்ந்த கொலைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications