மும்பையை புரட்டி எடுக்கும் தொடர் மழை.. ஹெல்ப்லைன் நம்பர்களை ஷேர் செய்யும் விஐபிகள்
மும்பை: மும்பையில் தொடர்ந்து பெரும் மழை பெய்து வருவதால் பல்வேறு பிரபலங்கள் டிவிட்டரில் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி செய்திகள் போட்ட வண்ணம் உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு ஹெல்ப்லைன் நம்பர்களையும் அவர்கள் டிவிட்டர் மூலமாக ஷேர் செய்து வருகின்றனர். 2005ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் மும்பை நகரை மிகப் பெரிய மழை புரட்டி எடுத்து வருகிறது. வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தால் மக்கள் மிகப் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு பிரபலங்கள் டிவிட்டர் மூலம் மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், உதவிகளையும், தகவல்களையும் அளித்தபடி உள்ளனர்.
|
சச்சின் கவலை
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு டிவிட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பல்வேறு ஹெல்ப்லைன் நம்பர்களை கொடுத்து டிவீட் செய்துள்ளார்.
|
ராஜ்தீப் சர்தேசாய்
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயும் பல்வேறு ஹெல்ப்லைன் எண்களை டிவீட் செய்துள்ளார்.
|
ஷ்ரத்தா கபூர்
நடிகை ஷ்ரத்தா கபூர் மக்களும், கால்நடைகளும் பத்திரமாக இருக்க வேண்டும் என கவலை தெரிவித்துள்ளார்.
|
உதவி செய்யக் கோரிய ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் ஒரு உதவி கோரிய டிவீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.,