உறவினர்கள், நண்பர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைத்த விஐபிக்கள்.. வெடிக்கும் புது சர்ச்சை
டெல்லி: நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விஐபிக்கள் பரிந்துரைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு 1300 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை முக்கிய பிரமுகர்கள் அனுப்பியது. அதுவும் தங்களது உறவினர்களுக்காக பத்ம விருது வழங்கவே அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இதில் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் எம்.பி சுப்பிராமி ரெட்டி, பண்டிட் ஜஸ்ராஜ் ஆகியோர் 12 பேருக்கும் அதிகமானோரை பரிந்துரைத்துள்ளனர். பாடகி லதா மங்கேஸ்கர் தமது சகோதரி உஷாவுக்காக பரிந்துரைத்திருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சியில் இருந்த அமர்சிங், ராஜ்யசபா எம்.பி.யான ஜெயபிரதாவுக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். ஒருசிலர் 25 பேரையும் கூட பரிந்துரைத்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications