சத்தீஸ்கரில் தாக்குதலுக்குப் பின் மாவோயிஸ்டுகள்- பாதுகாப்பு படை துப்பாக்கி சண்டை- வைரலாகும் வீடியோ
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கொடூர தாக்குதல் நடத்தி 11 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தண்டேவடா வனப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மிக கொடூரமானது 76 பாதுகாப்பு படையினரை பலி கொண்ட 2010-ம் ஆண்டு தாக்குதல்தான். இதன்பின் 4 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு சுக்மாவில் 15 பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டு அதே சுக்மாவில் மற்றொரு தாக்குதலில் மேலும் 12 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுக்மாவில் துணை ராணுவப் படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2017-ல் நடந்த மோதலில் 24 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 2018-ல் சுக்மாவில் மற்றொரு தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தினர். இதில் 9 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மாவின் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட்டு வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருமிதமாக பேசி வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் 11 பாதுகாப்பு படையினரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்திருக்கின்றனர்.

இதனிடையே சத்தீஸ்கரில் தாக்குதலுக்குப் பின் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Viral video surfaces showing moments after Dantewada Naxal attack in Chhattisgarh
— ANI (@ANI) April 27, 2023
(Source: Unverified) pic.twitter.com/6UXfOOhz5c

-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications