சத்தீஸ்கரில் தாக்குதலுக்குப் பின் மாவோயிஸ்டுகள்- பாதுகாப்பு படை துப்பாக்கி சண்டை- வைரலாகும் வீடியோ
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கொடூர தாக்குதல் நடத்தி 11 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தண்டேவடா வனப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மிக கொடூரமானது 76 பாதுகாப்பு படையினரை பலி கொண்ட 2010-ம் ஆண்டு தாக்குதல்தான். இதன்பின் 4 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு சுக்மாவில் 15 பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டு அதே சுக்மாவில் மற்றொரு தாக்குதலில் மேலும் 12 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுக்மாவில் துணை ராணுவப் படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2017-ல் நடந்த மோதலில் 24 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 2018-ல் சுக்மாவில் மற்றொரு தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தினர். இதில் 9 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மாவின் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட்டு வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருமிதமாக பேசி வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் 11 பாதுகாப்பு படையினரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்திருக்கின்றனர்.

இதனிடையே சத்தீஸ்கரில் தாக்குதலுக்குப் பின் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Viral video surfaces showing moments after Dantewada Naxal attack in Chhattisgarh
— ANI (@ANI) April 27, 2023
(Source: Unverified) pic.twitter.com/6UXfOOhz5c













Click it and Unblock the Notifications