தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும்: வீரேந்திர சேவாக் வேண்டுகோள்!!
தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வெண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் தங்களின் அமைதியான போராட்டத்தால் முன்னுதாரணமாக திகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழக மக்கள் அமைதிக்காக்க வேண்டும் என வீரேந்திர சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிவிட்டர் மூலமாக சேவாக் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழகம் முழுவதும் அமைதியாக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் எற்பட்டது. பல இடங்களில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் சேவாக் தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Request for Peace in Tamil Nadu.
— Virender Sehwag (@virendersehwag) January 23, 2017
The people of Tamil Nadu have led by example. Let vested interests not take advantage. Do your bit please.
''தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். தமிழக மக்கள் முன்னுதாரணமாக இருந்தார்கள். நிலையான நலன்களை தவறாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்'' இவ்வாறு வீரேந்திர சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் அமைதியாக போராடியதற்காக அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். என தமிழிலேயே சேவாக் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications