லலித் மோடிக்கு சுஷ்மா செய்தது மனிதநேய உதவியாம்.. சொல்கிறார் ராஜ்நாத் சிங்.
டெல்லி: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி போர்ச்சுகல் செல்வதற்கு விசா வழங்குமாறு, பிரிட்டன் அரசை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சுஷ்மா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறைகேடு, சூதாட்டப் புகார்களில் சிக்கி, இந்தியா அரசால் தேடப்பட்டு வரும் நபரான லலித் மோடி, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக, 2010-ஆம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், போர்ச்சுகலில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவியைப் பார்க்கச் செல்வதற்காக, அவருக்கு நுழைவுஇசைவு வழங்க உதவுமாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்.பி. கெய்த் வாஸ், அந்நாட்டுத் துணைத் தூதர் ஜேம்ஸ் பெவன் ஆகியோரிடம் சுஷ்மா பேசியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சுஷ்மாவின் பெயரைப் பயன்படுத்தி, பிரிட்டன் துணைத் தூதருக்கு கெய்த் வாஸ் கொடுத்த நெருக்கடியால், 24 மணி நேரத்தில் லலித் மோடி நுழைவு இசைவு பெற்றார் என்றும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவருக்கு நுழைவு இசைவு வழங்குவதற்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சுஷ்மாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "லலித் மோடிக்கு நுழைவு இசைவு வழங்கும் விவகாரத்தை சுஷ்மா ஸ்வராஜ் சரியாகவே கையாண்டிருக்கிறார். அவருடைய நிலைப்பாட்டை மத்திய அரசு முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறது.
பிரிட்டன் அரசின் சட்ட விதிகள் அனுமதித்தால் மட்டுமே லலித் மோடிக்கு நுழைவு இசைவு வழங்க வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். மனிதநேயமுள்ள எவரும் இந்த வழிமுறையைத்தான் பின்பற்றி இருப்பார்கள். சுஷ்மா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது," என்றார் ராஜ்நாத் சிங்.
லலித் மோடிக்கு உதவியது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ள விளக்கத்தில், "மனித நேய அடிப்படையிலேயே லலித் மோடிக்கு உதவினேன். சட்டப்படி ஆராய்ந்து அவருக்கு விசா வழங்குமாறு அந்நாட்டுத் துணைத் தூதரிடம் தெரிவித்தேன். லலித் மோடிக்கு விசா வழங்குவதற்கு பிரிட்டன் அரசு முடிவு செய்தால், இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்படாது," என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications